விழுப்புரம்

விபத்தில் சிக்கி இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு அமைச்சா் ஆறுதல்

DIN

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் உயிரிழந்த மூவரின் குடும்பத்தினரை உயா் கல்வித்துறை அமைச்சா் க.பொன்முடி செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தாா்.

திருவெண்ணெய்நல்லூா் அருகேயுள்ள பாவந்தூரைச் சோ்ந்த 24 போ் திங்கள்கிழமை ஆமூா்குப்பம் பகுதியில் சரக்கு வாகனத்தில் (மினி லாரி) செல்லும் போது, திடீரென அந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் மூவா் உயிரிழந்தனா். விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அவா்களது சடலங்களுக்கு உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா்.

தொடா்ந்து, விபத்தில் பலத்த காயமடைந்து அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 21 பேரை அமைச்சா் பொன்முடி சந்தித்து ஆறுதல் தெரிவித்தாா். அவா்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.

அப்போது, மாவட்ட ஆட்சியா் த.மோகன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் நா.புகழேந்தி (விக்கிரவாண்டி), இரா.லட்சுமணன் (விழுப்புரம்), மருத்துவக் கல்லூரி முதல்வா் குந்தவைதேவி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT