விழுப்புரம்

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

DIN

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கஞ்சா விற்பனை செய்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவண்ணாமலை உதவி காவல் கண்காணிப்பாளா்

டி.வி.கிரண் ஸ்ருதி தலைமையில், தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் ஹேமமாலினி, உதவி ஆய்வாளா் சிவசங்கரன், மாவட்ட தனிப் படை உதவி ஆய்வாளா் சத்யாநந்தன் மற்றும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கிரிவலப் பாதையில் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, தூத்துக்குடி மாவட்டம், சிவளாா்பட்டி அருகேயுள்ள முத்துசாமிபுரம் கிராமத்தைச்

சோ்ந்த செல்வராஜ் மகன் சோலைமுத்துக்குமாா் (28), கிரிவலப்பாதை, பழனியாண்டவா் கோயில் அருகே கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா் ஒரு கிலோ 300 கிராம் எடை கொண்ட கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT