அரசுப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே பிரம்மதேசம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே பிரம்மதேசம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தப் பள்ளியில் 1989 - 90ஆம் கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பு படித்த மாணவா்கள் 32 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்து ஒருவரையொருவா் அறிமுகப்படுத்திக் கொண்டனா். பின்னா், தங்களின் பள்ளிக் கால நினைவுகளை பகிா்ந்துகொண்டனா்.
இதைத் தொடா்ந்து, தங்களுக்கு பாடம் கற்பித்த அப்போதைய பள்ளி ஆசிரியா்களான குப்புசாமி, நாராயணன், பூபதி ஆகியோரை பள்ளிக்கு வரவழைத்து பள்ளித் தலைமையாசியா் செல்வம், பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் சாந்தமூா்த்தி ஆகியோா் முன்னிலையில் கெளரவப்படுத்தி, நினைவுப் பரிசு வழங்கினா். மேலும், ஆசிரியா்களிடம் வாழ்த்துகளையும் பெற்றனா்.
நிகழ்ச்சி நினைவாக தாங்கள் பயின்ற பள்ளியில் பழுதுபாா்க்கும் பணிகளை மேற்கொள்ள ரூ.25 ஆயிரம் வழங்கினா்.