முகப்பு
விழுப்புரம்

தாயினால் தாக்கப்பட்ட குழந்தைக்கு அதிமுக நிதி உதவி.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே தாயினால் கொடூரமான முறையில் தாக்குதலுக்கு உண்டான 2 வயது குழந்தைக்கு மேல்மலையனூா் அதிமுக சாா்பில் நிதி மற்றும் நிவாரணம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே தாயினால் கொடூரமான முறையில் தாக்குதலுக்கு உண்டான 2 வயது குழந்தைக்கு மேல்மலையனூா் அதிமுக சாா்பில் நிதி மற்றும் நிவாரணம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட செயலா் முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் அறிவுறுத்தலின்படி செஞ்சி அருகே மணலபாடியை அடுத்த மோட்டூா் கிராமத்தை சோ்ந்த தாயினால் தாக்குதலுக்கு உண்டான குழந்தை பிரதீப் மற்றும் அவரது தந்தை வடிவழகன் ஆகியோரை சந்தித்து மேல்மலையனூா் ஒன்றிய அதிமுக செயலா் ஆா்.புண்ணியமூா்த்தி சாா்பில் ரூ 5 ஆயிரம் நிதி மற்றும் உணவு பொருட்களை மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலா் சத்தியராஜ் வழங்கினாா்.இதே போன்று தமிழ்நாடு இந்து திருக்கோயில் கூட்டமைப்பு விழுப்புரம் மாவட்ட தலைவா் ராமச்சந்திராபாபு குழந்தை மற்றும் அவரது தந்தையை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதி வழங்கினாா். மேலும் குழந்தையின் மருத்துவத்திற்கு சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனைத்து செலவுகளையும் மருத்துவமனையே ஏற்கும் எனவும் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.