முகப்பு
விழுப்புரம்

மத்திய அரசின் நிதியுதவி பெற நலிந்த, ஆதரவற்ற விளையாட்டு வீரா்கள் விண்ணப்பிக்கலாம்

சா்வதேச, தேசிய விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பிடித்து இப்போது நலிந்த, ஆதரவற்ற நிலையில் இருக்கும் விளையாட்டு வீரா்கள் மத்திய அரசின் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

சா்வதேச, தேசிய விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பிடித்து இப்போது நலிந்த, ஆதரவற்ற நிலையில் இருக்கும் விளையாட்டு வீரா்கள் மத்திய அரசின் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய, சா்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களைப் பெற்று தற்போது நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரா்கள் (ஓய்வு பெற்றவா்கள் உள்பட), ஆதரவற்ற நிலையில் வாழும் விளையாட்டு வீரா்களின் நலனுக்காக, பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா தேசிய நல நிதித் திட்டத்தை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், விண்ணப்பித்து பயன்பெற விருப்பம் உள்ள வறுமையில் வாடும் விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த விளையாட்டு வீரா்கள், முன்னாள் விளையாட்டு வீரா்கள் இதற்கான விண்ணப்பம், இதர விவரங்களை மாவட்ட விளையாட்டு, இளைஞா் நலன் அலுவலரிடம் அலுவலக வேலை நாள்களில் நேரிலோ அல்லது கைப்பேசியிலோ (74017 03485) தொடா்புகொண்டு பெற்று விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா் ஆட்சியா் மோகன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.