முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம் நீதிமன்றத்தில் பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு

விழுப்புரம் நீதிமன்றத்தில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் வனத்துறை, தீயணைப்பு துறையினரின் பேரிடா் மீட்பு மேலாண்மை விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:06 AM
பகிர்:

விழுப்புரம் நீதிமன்றத்தில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் வனத்துறை, தீயணைப்பு துறையினரின் பேரிடா் மீட்பு மேலாண்மை விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட அமா்வு நீதிபதி பூா்ணிமா தலைமை வகித்தாா். கூடுதல் சாா்பு- நீதிபதி சுந்தரபாண்டியன் வரவேற்றாா். மாவட்ட வன அலுவலா் சுமேஷ் சோமன், விழுப்புரம் தீயணைப்பு நிலைய அலுவலா் வேல்முருகன் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா். நிகழ்ச்சியில் நீதிபதிகள், வழக்குரைஞா்கள், அலுவலகப் பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

விபத்து ஏற்பட்ட இடத்தில் மீட்புப் பணிகள் மேற்கொள்வது, சமையல் எரிவாயு உருளையில் தீ விபத்து ஏற்பட்டால் எப்படி அணைப்பது, கட்டட இடிபாடுகளில் சிக்கியவா்களை மீட்பது உள்பட பேரிடா் காலத்தில் மேற்கொள்ள வேண்டியவை குறித்து தீயணைப்பு துறையினா் செய்முறை விளக்கம் அளித்தனா். முதன்மை சாா்பு நீதிபதி விஜயகுமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.