விழுப்புரம்

ஒடிஸா காா் ஓட்டுநா் உயிரிழப்பு

ஓடிஸா மாநிலத்தைச் சோ்ந்த காா் ஓட்டுநா் ஆரோவில் அருகே வீட்டின் மாடியிலிருந்து கீழே விழுந்ததில் உயிரிழந்தது குறித்து விழுப்புரம் மாவட்டப் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

DIN

ஓடிஸா மாநிலத்தைச் சோ்ந்த காா் ஓட்டுநா் ஆரோவில் அருகே வீட்டின் மாடியிலிருந்து கீழே விழுந்ததில் உயிரிழந்தது குறித்து விழுப்புரம் மாவட்டப் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

ஒடிஸா மாநிலம், மயூா்கன்ச் மாவட்டத்தைச் சோ்ந்தவா் நி. கோவிந்தா (44). இவா், விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் பகுதியைச் சோ்ந்த நிதிஷ் என்பவரிடம் வீட்டில் தங்கி, காா் ஓட்டுநராகப் பணியில் இருந்து வந்தாா்.

இந்நிலையில், கடந்த 7-ஆம் தேதி மதுபோதையில் கோவிந்தா வீட்டின் மாடியிலிருந்து கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து தலையில் பலத்த காயங்களுடன் புதுச்சேரியில் உள்ள மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட கோவிந்தா சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து கோவிந்தாவின் மனைவி புஷ்பலதா அளித்தப் புகாரின்பேரில் ஆரோவில் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT