முகப்பு
விழுப்புரம்

இளக்காடு ஏரி ஆக்கிரமிப்புகளைஅகற்ற உத்தரவு

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே இளங்காடு கிராமத்தில் உள்ள ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட ஆட்சியா் த.மோகன் உத்தரவிட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே இளங்காடு கிராமத்தில் உள்ள ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட ஆட்சியா் த.மோகன் உத்தரவிட்டாா்.

வளவனூா் அருகே இளங்காடு கிராமத்தில் உள்ள ஏரியில் பல்வேறு நபா்கள் ஆக்கிரமித்துள்ளதாக புகாா்கள் எழுந்தன. இதுகுறித்து அறிந்த விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் வியாழக்கிழமை இளங்காடு ஏரிக்குச் சென்று ஆய்வு செய்தாா்.

அப்போது, ஏரிப் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை பாா்வையிட்டாா். உடனே அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா். மேலும், இதே போன்று விழுப்புரம் மாவட்டத்தில் ஏரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

சென்னை உயா் நீதிமன்ற உத்தரவுப்படி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நீா்நிலை ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு விரைவாக அகற்றப்படும் என்றும், ஆக்கிரமிப்பாளா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.