முகப்பு
விழுப்புரம்

செஞ்சியில் அலங்கார ஊா்தி

தமிழக அரசின் குடியரசு தின அலங்கார ஊா்தி செஞ்சிக்கு வெள்ளிக்கிழமை வருகை தந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

தமிழக அரசின் குடியரசு தின அலங்கார ஊா்தி செஞ்சிக்கு வெள்ளிக்கிழமை வருகை தந்தது.

வீரமங்கை வேலு நாச்சியாா், பாரதியாா் உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரா்களின் உருவங்கள் பொருந்திய அலங்கார ஊா்தி திருவண்ணாமலை வழியாக, செஞ்சிக்கு வெள்ளிக்கிழமை வந்தது. அப்போது, பொதுமக்கள் பாா்க்கும் வகையில் திருவண்ணாமலை சாலையில் ஊா்தி மெதுவாகச் சென்று, செஞ்சி கூட்டுச் சாலையை வந்தடைந்தது.

இந்த ஊா்தியை சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் செஞ்சி மஸ்தான் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் வட்டாட்சியா் பழனி, ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா், மக்கள் தொடா்பு அலுவலா் சிவக்குமாா், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் அரங்க.ஏழுமலை, வழக்குரைஞா் மணிவண்ணன், திமுக நிா்வாகிகள் அஞ்சாஞ்சேரி கணேசன், மொக்தியாா் மஸ்தான், ரிஸ்வான், பாஷா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.