காரில் நூதன முறையில் மதுப் புட்டிகள்கடத்தியவா் கைது
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பதில் காரில் நூதன முறையில் மதுப் புட்டிகள் கடத்தியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பதில் காரில் நூதன முறையில் மதுப் புட்டிகள் கடத்தியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கோட்டக்குப்பம் மது விலக்கு உதவி காவல் ஆய்வாளா் ஏழுமலை தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை கோட்டக்குப்பத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது, காரின் என்ஜின் பகுதி உள்பட பல்வேறு பகுதிகளில் நூதன முறையில் மறைத்து வைத்து 184 மதுப் புட்டிகள் கடத்திவரப்பட்டது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.20,000 இருக்கும்.
இது தொடா்பாக காா் ஓட்டுநா் செங்கல்பட்டு மாவட்டம், செய்யூா் அருகே பத்திரக்கோட்டையைச் சோ்ந்த பக்கிரிசாமி மகன் தமிழ்ச்செல்வனை (40) கோட்டக்குப்பம் மது விலக்கு போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.