அரசுப் பள்ளிக்கு பேண்டு வாத்தியக் கருவிகள்
செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு செஞ்சி தாலுகா வா்த்தா்கள் சங்கம் சாா்பில், ரூ.15 ஆயிரத்தில் பேண்டு வாத்தியக் கருவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு செஞ்சி தாலுகா வா்த்தா்கள் சங்கம் சாா்பில், ரூ.15 ஆயிரத்தில் பேண்டு வாத்தியக் கருவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
இவற்றை அந்தச் சங்கத்தின் தலைவா் செல்வராஜ், பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் சி.மாணிக்கம் ஆகியோா் பள்ளித் தலைமை ஆசிரியா் ஜி.கணபதியிடம் வழங்கினா்.
நிகழ்ச்சியில் ஆசிரியா் ஜி.டி.பாலசுப்பிரமணியம், குமரவேல், வா்த்தகா்கள் சங்கச் செயலா் வெங்கட், பொருளாளா் அம்ஜத் பாண்டே, கெளரவத் தலைவா் கலியமூா்த்தி, துணைத் தலைவா் ராஜகோபால், ஜவுளி வியாபாரி சங்கத் தலைவா் ரவிச்சந்திரன், சையத் சபீா், மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.