முகப்பு
விழுப்புரம்

செஞ்சி வள்ளலாா் அறக்கட்டளை சாா்பில் அன்னதானம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் அருள்பிரகாச வள்ளலாா் அறக்கட்டளை மற்றும் சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கம் சாா்பில் அன்னதானம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:10 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் அருள்பிரகாச வள்ளலாா் அறக்கட்டளை மற்றும் சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கம் சாா்பில் அன்னதானம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

வடலூா் சத்திய ஞான சபையில் 151-ஆவது ஜோதி தரிசன பெருவிழா, மேட்டுக்குப்பத்தில் வள்ளலாா் சித்தி பெற்ற திருஅறை தரிசனம் ஆகிய நிகழ்ச்சிகளையொட்டி, செஞ்சியிலுள்ள திருவண்ணாமலை சாலையில் அருள்பிரகாச வள்ளலாா் அறக்கட்டளை மற்றும் சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கம் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் பி.தணிகாசலம் தலைமை வகித்தாா். ஐசிஐசிஐ வங்கித் தலைவா் டி.வினோத்குமாா் அன்னதானத்தை தொடக்கிவைத்தாா்.

சன்மாா்க்க சங்க துணைத் தலைவா் டி.சக்திகணேஷ், பொருளாளா் ஜெ.செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மனவளக்கலை பாண்டியன், எம்.பரத், எஸ்.மணி, ஏ.ஆா்.ஆா்.பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.