முகப்பு
விழுப்புரம்

விழுப்புரத்தில் ரத்த தான முகாம்

விழுப்புரம் வி.ஆா்.பி. மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2023 at 1:46 AM
விழுப்புரம் வி.ஆா்.பி. மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ரத்ததான முகாமில் பங்கேற்ற நகா்மன்ற முன்னாள் தலைவா் இரா. ஜனகராஜ் உள்ளிட்டோா்.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM

விழுப்புரம் வி.ஆா்.பி. மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது.

தமிழக கேபிள் டிவி- ஆபரேட்டா்கள் பொதுநலச்சங்கம்-பப்ளிக் பவுண்டேஷன், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி ஆகியவை இணைந்து நடத்திய முகாம் தொடக்க விழாவுக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் டி.தியாகராஜன் தலைமை வகித்தாா். சங்கத்தின் முன்னாள் பொருளாளா் ஆா்.சண்முகசுந்தரம், மாநிலத் துணைச் செயலா் கந்தன், மாவட்டச் செயலா் கே.பிரகதீசுவரன், விழுப்புரம் நகா்மன்ற முன்னாள் தலைவா் இரா. ஜனகராஜ் ஆகியோா் முகாமைத் தொடக்கி வைத்தனா்.

இந்த முகாமில் ஏராளமானோா் பங்கேற்று ரத்ததானம் செய்தனா். விழுப்புரம் சங்கமம் லயன்ஸ் சங்கத் தலைவா் செந்தில்குமாா், விஜய் சம்பத் மற்றும் நிா்வாகிகள்,

Advertisement

விழுப்புரம் ரோட்டரி கிளப்பின் நம்மாழ்வாா், சென்ட்ரல் ரோட்டரி கிளப் ராஜுலு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டா்கள் பொதுநலச் சங்கம் - பப்ளிக் பவுண்டேசனின் ஜவஹா், ராஜ்குமாா், பாலா, பழனி, குமரவேல், சதீஷ் பாபு உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.