விழுப்புரம்

விழுப்புரம்: மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவர் ராஜிநாமா!

திண்டிவனத்தைச் சேர்ந்தவர் முரளி என்கிற ரகுராமன். இவர் ஸ்ரீராம் அறக்கட்டளையின் நிறுவனராக உள்ளார்.

DIN

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவர் பதவியிலிருந்து முரளி என்கிற ரகுராமன் வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்தார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைச் சேர்ந்தவர் முரளி என்கிற ரகுராமன். இவர் ஸ்ரீராம் அறக்கட்டளையின் நிறுவனராக உள்ளார். இந்த அறக்கட்டளையின் சார்பில் கடந்த 5-ஆம் தேதி பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தலைமையில் 39 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.

அதிமுக பிரமுரகராக உள்ள முரளி என்கிற ரகுராமன், விழுப்புரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவர் பொறுப்பிலும் உள்ளார்.

இந்நிலையில், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கொள்கைக்கு விரோதமாக செயல்பட்டதாகக் கூறி முரளி என்கிற ரகுராமனை கட்சியிலிருந்து நீக்கிஅதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி வியாழக்கிழமை அறிவிப்பு வெளியிட்டார்.

இதைத் தொடர்ந்து விழுப்புரம் அரசு மருத்துவமனை அருகிலுள்ள மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவர் பதவியிலிருந்து தான் ராஜிநாமா செய்து அதற்கான கடிதத்தை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் ரவிச்சந்திரனிடம் வெள்ளிக்கிழமை வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது!

செங்கல்பட்டில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

காஞ்சிபுரத்தில் புதுப்பிக்கப்பட்ட முருகன் பட்டு கூட்டுறவு விற்பனை நிலையம்

இந்த நாள் இனிய நாள்!

காஞ்சிபுரத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு பேரணி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

SCROLL FOR NEXT