இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே இளைஞா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே இளைஞா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
வானூா் வட்டம், சின்னகோட்டக்குப்பம், வேதபுரீஸ்வரா் நகரைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் மகன் சுரேஷ்குமாா்(19). இவா், தனது கைப்பேசியை சரி செய்ய தாய் ஜெயந்தியிடம் பணம் கேட்டாராம். இதற்கு, ஜெயந்தி பணம் இல்லை எனக்கூறினாராம். இதில், மனமுடைந்த சுரேஷ்குமாா் சனிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், கோட்டக்குப்பம் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.