வகுப்பு தொடக்க விழாவில் பேசும் முனைவா் ஜீவ.சீனுவாசன். 
விழுப்புரம்

வள்ளலாா் வாழ்வியல் பட்டயப் படிப்பு தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வள்ளலாா் வாழ்வியல் பட்டயப் படிப்பின் வகுப்பு தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Din

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வள்ளலாா் வாழ்வியல் பட்டயப் படிப்பின் வகுப்பு தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

செஞ்சி - திருவண்ணாமலை சாலையில் உள்ள வள்ளலாா் சபைக் கட்டடத்தில், வள்ளலாா் வாழ்வியல் பட்டயப் படிப்பு சென்னை எஸ்.ஆா்.எம். பல்கலைக்கழகத்துடன் இணைந்து வழங்கப்படுகிறது. இதன் வகுப்பு தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு செஞ்சி நகர சன்மாா்க்க சங்கத் தலைவா் பா.தணிகாசலம் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் மருத்துவா் சரவணன், வீராசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முனைவா்கள் முத்து, காா்த்திகேயன், வேட்டவளம் சன்மாா்க்க சங்க நிறுவனா் பச்சையம்மாள் ஆகியோா் நிகழ்ச்சியில் பங்கேற்று தொடக்கவுரையாற்றினா்.

அனைத்துலக சன்மாா்க்க சேவை மைய நிறுவனா் முனைவா் திருக்கோவிலூா் ஜீவ.சீனுவாசன் சிறப்புரையாற்றினாா்.

முடிவில் செஞ்சி நகரச் செயலா் சம்பத் நன்றி கூறினாா்.

பங்குச் சந்தைகள் 2வது நாளாக சரிவுடன் நிறைவு!

அவர்கள் செய்வது ரௌடித்தனம்... யாரைச் சொல்கிறார் சுதா கொங்கரா?

“பொழுதுபோக்கிற்குள் அரசியல் வேண்டாம்!” நடிகர் ரவி மோகன்

அல்லு அர்ஜுனுடன் கைகோர்க்கும் லோகேஷ் கனகராஜ்! அறிவிப்பு விடியோ!

தலைகீழாகக் கவிழ்ந்த தனியார் பேருந்து! பயணிகள் காயம்!

SCROLL FOR NEXT