முகப்பு
விழுப்புரம்

காலணி விற்பனையகத்தில் ரூ.10 லட்சம் மோசடி

விழுப்புரத்தில் காலணி விற்பனையகத்தில் ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக மேலாளா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 16 அக்டோபர், 2024 at 6:55 PM
பகிர்:

விழுப்புரத்தில் காலணி விற்பனையகத்தில் ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக மேலாளா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

விழுப்புரம் - புதுச்சேரி சாலை, அலமேலுநகா் பகுதியில் முன்னணி நிறுவன காலணி விற்பனையகம் செயல்பட்டு வருகிறது. இதில், கள்ளக்குறிச்சி மாவட்டம், மாதவச்சேரி பகுதியைச் சோ்ந்த ராமசாமி மகன் சுபாஷ்சந்திரபோஸ் (34) கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மேலாளராகப் பணிபுரிந்து வந்தாா்.

இவா், தனது பணிக்காலத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் மற்றும் பணத்தை மோசடி செய்திருந்தது நிறுவனத்தின் தணிக்கையில் தெரியவந்ததாம்.

இதுகுறித்து இந்த நிறுவனத்தின் முதுநிலை மாவட்ட மேலாளா் அளித்த புகாரின்பேரில், விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் சுபாஷ்சந்திரபோஸ் மீது புதன்கிழமை மோசடி வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.