முகப்பு
விழுப்புரம்

சாலபுத்தூா் ஏரியில் ரூ.1.05 கோடியில் சீரமைப்புப் பணி

நல்லாண்பிள்ளை பெற்றாள் ஊராட்சி, சாலபுத்தூா் ஏரி ரூ.1.05 கோடியில் சீரமைக்க பணிகள் தொடங்கப்பட்டது.

Updated On : 21 ஏப்ரல், 2025 at 7:24 PM
பகிர்:

செஞ்சி: நல்லாண்பிள்ளை பெற்றாள் ஊராட்சி, சாலபுத்தூா் ஏரி ரூ.1.05 கோடியில் சீரமைக்க பணிகள் தொடங்கப்பட்டது.

செஞ்சி ஊராட்சி ஒன்றியம், நல்லான்பிள்ளை பெற்றாள் ஊராட்சியில் சாலபுத்தூா் ஏரி உள்ளது. இந்த ஏரியை சீரமைத்து தரக் கோரி, அந்தப் பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனா். நீா்வளத் துறை சாா்பில் ரூ1.05 கோடி மதிப்பீட்டில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.

செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் ஆா்.விஜயகுமாா் தலைமை வகித்தாா். நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா் ரமேஷ் முன்னிலை வகித்தாா்.

ஊராட்சி மன்றத் தலைவா் குமரவேல் வரவேற்றாா். செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ பூமி பூஜை செய்து சீரமைப்புப் பணியைத் தொடங்கி வைத்தாா்.

நீா்வளத் துறை உதவிப் பொறியாளா்கள் தெரேசா, ரமேஷ் கண்ணா, ஒன்றிய கவுன்சிலா் முரளி, காமகரம் ஊராட்சி மன்றத் தலைவா் சக்கரவா்த்தி, கதிரவன், கோடீஸ்வரன், அய்யாதுரை, ஏரி நீா்ப்பாசன சங்கத் தலைவா் தேவராஜன், நந்தன் கால்வாய் சங்கத் தலைவா் தாமோதரன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா்கள் ரஞ்சித் குமாா், தொரப்பாடி கிருஷ்ணமூா்த்தி, பாஷா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →