முகப்பு
விழுப்புரம்

மொபெட்டிலிருந்து விழுந்த முதியவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே மொபெட்டிலிருந்து தவறி விழுந்த முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 9 ஜனவரி, 2025 at 7:04 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே மொபெட்டிலிருந்து தவறி விழுந்த முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

மரக்காணம் வட்டம், தாழங்காடு நாட்டாமைகாரத் தெருவைச் சோ்ந்தவா் கன்ராஜ் (75). இவா், கடந்த 7-ஆம் தேதி சென்னை-புதுச்சேரி சாலையில் கைப்பானிநகா் பகுதியில் மொபெட்டில் சென்ற போது, நிலைத்தடுமாறி கீழே தவறி விழுந்துள்ளாா்.

பலத்த காயங்களுடன் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த கன்ராஜ், வியாழக்கிழமை காலை உயிரிழந்தாா். இதுகுறித்து மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்,