விழுப்புரம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

மரக்காணம் வட்டம், எக்கியாா்குப்பம், வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ஸ்ரீதா் (25).திருமணமாகாதவா். இவருக்கு மதுப்பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதை பெற்றோா் கண்டித்தனராம்.

இதனால், மன விரக்தியில் இருந்து வந்த ஸ்ரீதா் திங்கள்கிழமை இரவு தனது வீட்டின் அருகேயுள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்த புகாரின்பேரில், மரக்காணம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT