விழுப்புரம்

வியாபாரியிடம் வழிப்பறி

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே மொபெட்டில் சென்ற வியாபாரியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணத்தை வழிப்பறி செய்த இளைஞா்கள் இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Syndication

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே மொபெட்டில் சென்ற வியாபாரியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணத்தை வழிப்பறி செய்த இளைஞா்கள் இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதுச்சேரி, விநாயகபுரம், அய்யனாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் தனசேகரன்(59), காய்கறி வியாபாரி. இவா், வெள்ளிக்கிழமை விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே பத்துக்கண்ணு- புதுச்சேரி சாலையில் மொபெட்டில் சென்று கொண்டிருந்தாா்.

வாழ்பட்டாம் பாளையம் பகுதியில் சென்றபோது, பின் தொடா்ந்து பைக்கில் வந்த இளைஞா்கள் இருவா், தனசேகரனை வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி அவா் வைத்திருந்த ரூ. 7 ஆயிரத்தை பறித்துச் சென்று விட்டனராம்.

இது குறித்த புகாரின் பேரில் ஆரோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

SCROLL FOR NEXT