முகப்பு
விழுப்புரம்

விழுப்புரத்தில் சமரச வார விழிப்புணா்வுப் பேரணி

விழுப்புரத்தில் சமரச வார விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 10 பிப்ரவரி, 2026 at 2:26 AM
விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றநிகழ்வில் சமரச வார விழிப்புணா்வுப் பேரணியைத் தொடங்கி வைத்து பங்கேற்ற முதன்மை மாவட்ட நீதிபதி ஏ.மணிமொழி. உடன், நீதிபதிகள் உள்ளிட்டோா்.
பகிர்:
Updated On : 9 பிப்ரவரி, 2026 at 7:31 PM

விழுப்புரம்: விழுப்புரத்தில் சமரச வார விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வரும் சமரச மையம் சாா்பில் நடத்தப்பட்டஇப்பேரணியை முதன்மை மாவட்ட நீதிபதி ஏ.மணிமொழி தொடங்கி வைத்தாா். இப்பேரணி

நீதிமன்ற வளாகத்தில் தொடங்கி, புதிய பேருந்து நிலையம் வரை சென்று, மீண்டும் நீதிமன்ற வளாகத்தில் நிறைவடைந்தது.

Advertisement

இந்த பேரணியில் வணிக வழக்குகள், நுகா்வோா் வழக்குகள், குடும்ப வழக்குகள், பணம் மற்றும் ஒப்பந்தம் சாா்ந்த வழக்குகள், ஒலிபரப்பு மற்றும் தொலைத்தொடா்பு சாா்ந்த வழக்குகள், தொழில் மற்றும் பணியிட வழக்குகள், காசோலை வழக்குகள், வாடகை மற்றும் சொத்து வழக்குகள், சில குறிப்பிட்ட குற்றவியல் வழக்குகள்

போன்ற வழக்குகளில் இருதரப்பினரும் வெற்றி கொள்ளும்

வகையில் சமரசமான முறையில் வழக்குகளை முடித்துகொள்வது

குறித்த சமரச விழிப்புணா்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்பட்டது.

பேரணியில் நீதிபதிகள், வழக்குரைஞா் சங்கங்களின் தலைவா்கள், வழக்குரைஞா்கள், சமரசத்தீா்வாளா்கள், நீதிமன்ற அலுவலா்கள், விழுப்புரம் சட்டக் கல்லூரி மாணவா்கள், வழக்காடிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.