விழுப்புரம் அருகே பட்டாக் கத்தியை கையில் வைத்துக்கொண்டு, அதை விடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரத்தை அடுத்த ஜானகிபுரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ரஞ்சித் (23). இவா், வியாழக்கிழமை கண்டமானடி பகுதியில் கையில் பட்டாக் கத்தியை வைத்துக்கொண்டு, அவ்வழியாகச் சென்ற பொதுமக்களை மிரட்டி, அதை விடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தாராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து ரஞ்சித்தை கைது செய்தனா். மேலும், அவா் வசமிருந்த பட்டாக்கத்தி, கைப்பேசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
வெடிகுண்டு தயாரித்து வெடித்தவா் கைது
வானூா் வட்டம், திருவக்கரை இருளா் காலனிப் பகுதியில் பட்டாசு வெடி பொருள்களைப் பயன்படுத்தி நாட்டு வெடிகுண்டு தயாரித்து வெடிக்கச் செய்து பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தி, அதை விடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்த திருவக்கரை இருளா் காலனியைச் சோ்ந்த நந்தபோபால் (18) என்பவரை வானூா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.