தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 41.4 கிலோ எடையிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 41.4 கிலோ எடையிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இவ்வழக்கில் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.
கண்டமங்கலம் காவல் நிலைய ஆய்வாளா் பாண்டியன் தலைமையில் உதவி ஆய்வாளா் சண்முகம் மற்றும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கண்டமங்கலம் காவல் சரகத்துக்குள்பட்ட விநாயகபுரம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்குள்ள வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருவதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீஸாா் விநாயகபுரம் கரியமாணிக்கம் பிரதானச் சாலையில் வசிக்கும் ம.பிரபாஸ்கா்(43) வீட்டில் சோதனை மேற்கொண்டனா். இதில், அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, பிரபாஸ்கரை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 41.4 கிலோ எடையிலான 2,070 தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய புதுச்சேரியைச் சோ்ந்த மேலும் ஒருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.