தற்சமயம் ஏழரை நாட்டுச் சனி முடியும் தருவாயில் உள்ளது. அதோடு பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் சுக்கிர பகவானின் தசையும் நடக்கிறது. குருபகவானின் பார்வையும் சுக்கிரபகவானின் மீது படிவதால் இந்த தசையில் படிப்படியாக முன்னேற்றமடைந்து நல்ல நிலையை எட்டி விடுவீர்கள். உங்களுக்கு ஹம்ஸ யோகம், சந்திர மங்கள யோகம் போன்ற சிறப்பான யோகங்கள் உள்ளன. நிதி அல்லது கல்வி நிறுவனங்களில் வேலைக்குச் செல்லலாம். உடல் ஆரோக்கியமும் சீராகவே இருக்கும். அடுத்த ஆண்டு இறுதிக்குள் இடம் விற்பனையாகும். சொந்த ஊரில் வீடு கட்டி வாழலாம். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியபகவானை வழிபட்டு வரவும்.