ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகனுக்கு மணவாழ்க்கை சரியாக அமையாததால் விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. இது எப்போது முடியும்? மறுமணம் எப்போது நடைபெறும்? சரியான வேலை எப்போது கிடைக்கும்? எதிர்காலம் எவ்வாறு அமையும்?  - வாசகர்

DIN

உங்கள் மகனுக்கு மேஷ லக்னம், விருச்சிக ராசி, அனுஷம் நட்சத்திரம். லக்னம் மற்றும் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் லக்னத்திலேயே மூலதிரிகோண ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்து பஞ்சமகா புருஷ யோகங்களில் ஒன்றான ருசக யோகத்தைக் கொடுக்கிறார். பூர்வபுண்ணியாதிபதி சூரியபகவான் லாப ஸ்தானத்தில் புதபகவானுடன் இணைந்து புதஆதித்ய யோகம் பெற்று அவர்கள் பூர்வபுண்ணிய ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார்கள். பாக்கியம் மற்றும் அயன ஸ்தானாதிபதியான குருபகவான் அயன ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்றிருக்கிறார். இதனால் மூன்று திரிகோணாதிபதிகளும் சுப பலத்துடன் இருக்கிறார்கள் என்று கூற வேண்டும்.
 சுகாதிபதி நீச்சம் பெற்று அந்த வீட்டுக்கதிபதியான செவ்வாய்பகவான் ஆட்சி பெற்றிருப்பதால் சந்திரபகவானுக்கு நீச்சபங்க ராஜயோகம் உண்டாகிறது. அவருடன் கர்ம லாபாதிபதியான சனிபகவான் இணைந்து அவர்கள் இருவரின் மேல் குருபகவானின் ஒன்பதாம் பார்வை படிகிறது. இதனால் சுகம், உத்தியோகம் இரண்டும் நல்ல முறையில் தொடரும் என்று கூறலாம். அதோடு குருபகவானின் ஐந்தாம் பார்வை சுக ஸ்தானத்தின் மீது படிவதால் சுக ஸ்தானம் பாதிக்கப்படவில்லை என்றும் உறுதியாகக் கூறலாம்.
 களத்திர, நட்பு ஸ்தானாதிபதியான சந்திரபகவான் பாக்கிய ஸ்தானத்தில் சுய சாரத்தில் அமர்ந்திருக்கிறார். தற்சமயம் கோசாரத்தில் கேதுபகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளது. தற்சமயம் கோசாரத்தில் குருபகவான் இரண்டாம் இடத்திலும், ஏழரை நாடு சனியும் ஜனவரி மாதம் முடிவடைகிறபடியாலும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் விவாகரத்து கிடைத்துவிடும். மேலும் தனியார் துறையில் வேலையும் கிடைத்துவிடும். இன்னும் மூன்றாண்டுகளுக்குள் மறுமணம் நடக்கும். எதிர்காலம் சிறப்பாக அமையும். வெளிநாடு சென்று பொருளீட்டும் யோகமும் உண்டு. பிரதி திங்கள்கிழமைகளில் விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

SCROLL FOR NEXT