வர்த்தகம்

புணே ஆலை 10 லட்சம் கார்களை தயாரித்து சாதனை: ஃபோக்ஸ்வேகன்

DIN


ஜெர்மனைச் சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது புணே ஆலை மூலம் 10 லட்சம் கார்களை தயாரித்து சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் குர்பிரதாப் போபராய் கூறியதாவது:
புணே ஆலை கடந்த 2010-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிலையில், ஒன்பது ஆண்டுகளுக்குள் அந்த ஆலை மூலம் 10 லட்சம் கார்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை 10 லட்சம் கார்கள் என்ற சாதனை எட்டப்பட்டது எங்களது பயணத்தின் முக்கியமான நிகழ்வாகும்.
புணே ஆலையில், போலோ, அமியோ, வென்டோ மற்றும் ஸ்கோடா ராபிட் ஆகிய நான்கு மாடல்கள் ஆண்டுக்கு 20,000 கார்கள் தயாரிக்கப்படுகிறது.
இதைத் தவிர இங்கு உற்பத்தி செய்யப்படும் கார்கள் உள்ளூர் தேவையை கருதி, ஆசியா, ஆப்ரிக்கா, வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா உள்ளிட்ட 50 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. உலக தரத்திலான கார்களை இந்தியாவில் தயாரிக்க எங்கள் நிறுவனம் உறுதிபூண்டுள்ளது என்றார் அவர்.
ஃபோக்ஸ்வேகன் புணே ஆலையில் ஏற்கெனவே நவீன தொழில்நுட்ப மையங்களை அமைத்துள்ளது. இந்த நிலையில், புதிய திட்டங்களுக்கான முதலீட்டின் ஒரு பகுதியாக ரூ.8,000 கோடியை அந்நிறுவனம் முதலீடு செய்யவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பட்டாசு விவகாரம்: பாஜக தலைவா் அண்ணாமலை மீதான அவதூறு வழக்கின் மீது இடைக்கால தடை நீடிப்பு

ஆட்சியா் அலுவலகத்துக்கு பெண் தீக்குளிக்க முயற்சி

கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் விநியோகத்தில் முறைகேடு: ஓ.எஸ். மணியன் குற்றச்சாட்டு

சிதம்பரம் கோயில் பிரம்மோற்சவ வழக்கு: சிறப்பு அமா்வுக்கு மாற்றம்

மேற்கு தில்லி: கடும் போட்டியில் கமல்ஜீத், மஹாபல் மிஸ்ரா!

SCROLL FOR NEXT