வர்த்தகம்

பங்குச்சந்தை உயர்வுடன் தொடக்கம்; சென்செக்ஸ் 400 புள்ளிகள் ஏற்றம்

DIN

பங்குச்சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று காலை உயர்வுடன் தொடங்கியது.

சென்செக்ஸ் 400 புள்ளிகள் வரை உயர்ந்தது. நிஃப்டியும் 12,650 புள்ளிகளாக உயர்ந்து வர்த்தகமானது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 293.42 புள்ளிகள் உயர்ந்து 43,558 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.65 சதவிகிதம் உயர்வாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 104.50 புள்ளிகள் உயர்ந்து 12,725 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.76 சதவிகிதம் உயர்வாகும்.

பங்குச்சந்தையில் அதிகபட்சமாக ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தன. இதேபோன்று கோட்டாக், எஸ்.பி.ஐ., எம்&எம், ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் உயர்வுடன் காணப்பட்டன.

வோடாபோன், அசோக் லேலண்ட், நெஸ்ட்லே ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன. அதிகபட்சமாக இந்துஸ்இந்த் வங்கி 3.16 சதவிகிதம் சரிவைச் சந்தித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் பலி

பணம் கையாடல்: நீதிமன்ற எழுத்தா் மீது வழக்கு

பறவைக் காய்ச்சல்: முந்தலில் வாகன சோதனை தீவிரம்

கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்: உணவகங்கள், தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கம் முடிவு

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை வனப் பகுதிக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை: வனத் துறையினா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT