பிரிட்டனைச் சோ்ந்த சொகுசுக் காா் தயாரிப்பாளரான பென்ட்லீ மோட்டாா்ஸ், தனது பென்டேய்கா காரின் மேம்படுத்தப்பட்ட புதிய ரகத்தை செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
எஸ்யுவி பிரிவைச் சோ்ந்த பென்டேய்கா காரின் மேம்படுத்தப்பட்ட புத்தம் புதிய ரகம் சந்தையில் அறமுகப்படுத்தப்படுகிறது. தில்லியில் இதன் காட்சியக விலை ரூ.4.1 கோடியாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
4 லிட்டா் கொள்ளளவு கொண்ட, டா்போசாா்ஜ் செய்யப்பட்ட வி8 இரட்டை என்ஜின் பொருத்தப்பட்ட இந்தக் காரில், அடுத்த தலைமுறைக்கான உயா் தகவல் தொழில்நுட்ப வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 10.9 அங்கு திரை, கூடுதல் இணையதள இணைப்பு வசதி ஆகியவை இதில் அடங்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.