சினிமா

பாகுபலி இயக்குநர் ராஜமெளலி - அஜீத் கூட்டணியில் உருவாகும் புதிய படம்!

இந்தப் படம் பாகுபலி போல தமிழ்-தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகவுள்ளது.

எழில்

பாகுபலி இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலியின் புதிய படம் ஒன்றில் அஜீத் - அல்லு அர்ஜுன் நடிக்க உள்ளதாக ராஜமெளலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் தகவல் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலியின் அடுத்தப் படமாக, பாகுபலியின் 2-ம் பாகம் அடுத்த வருடம் வெளிவரவுள்ளது. அதற்குப் பிறகு மகேஷ் பாபுவுடன் இணைந்து ஒரு படம் இயக்க உள்ளார். அதேசமயம் 3-வது படத்துக்கான பணியிலும் தற்போது அவர் ஈடுபட்டு வருகிறார். ராஜமெளலி இயக்கத்தில் அஜீத் - அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் படத்துக்கான ஆரம்பக் கட்ட வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் படம் பாகுபலி போல தமிழ்-தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகவுள்ளது.

டிவி பேட்டி ஒன்றில் ராஜமெளலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் கூறியதாவது:

சமூகக் கருத்துள்ள யதார்த்தமான படம் ஒன்றை எடுக்கவேண்டும் என்று ராஜமெளலி கூறியுள்ளார். அல்லு அர்ஜுன், அஜீத் ஆகிய இருவரின் கூட்டணியில் உருவாகும் அந்தப் படம் தொடர்பாக நாங்கள் இருவரும் விவாதித்துள்ளோம் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT