சினிமா

பாகுபலி 2-வுக்காக விஜய் பட வாய்ப்பை மறுத்த சத்யராஜ்!

இதனால் விஜய்யின் புதிய படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பை இழந்துள்ளார் சத்யராஜ்.

எழில்

பாகுபலி படம் சத்யராஜூக்கு நல்லப் பெயரைப் பெற்றுத் தந்துள்ளது. மேலும் அவருக்கு பாகுபலி 2-ல் கூடுதல் முக்கியத்துவம் உள்ளதால் படப்பிடிப்புக்காக 100 நாள்கள் ஒதுக்குமாறு இயக்குநர் ராஜமெளலி சத்யராஜிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனால் விஜய்யின் புதிய படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பை இழந்துள்ளார் சத்யராஜ்.

புலி படத்துக்கு அடுத்ததாக அட்லீயின் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இதில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு சத்யராஜுக்கு வந்தது. ஆனால் பாகுபலி 2-வுக்காக நூறு நாள்கள் தேவைப்படுவதால் விஜய் பட வாய்ப்பை மறுத்துள்ளார் சத்யராஜ்.

செப்டம்பர் முதல் பாகுபலி 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும். ஏற்கெனவே 40% படக்காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுள்ளன. 2016 ஏப்ரல்-மே-யில் பாகுபலி 2 வெளியாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT