சினிமா

போலி ஃபேஸ்புக் ஐடி: சரத்குமார் போலீஸில் புகார்!

இது எனது புகழுக்கும், கெளரவத்துக்கும் களங்கம் விளைவிக்கிறது. எனவே, போலியான சமூக வலைத்தளங்களை முடக்கவும்...

எழில்

சமூகவலைத்தளங்களில் தன் பெயரில் போலி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதால் இது தொடர்பாக நடவடிக்க எடுக்கவேண்டும் என்று நடிகர் சரத்குமார் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் காவல்துறையில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:

என் பெயரில் பல புகைப்படங்களுடன் போலியான சமூக வலைத்தளங்கள் (ஃபேஸ்புக்) செயல்பட்டு வருகின்றன. அதில் விரும்பத்தகாத புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்கள். இது எனது புகழுக்கும், கெளரவத்துக்கும் களங்கம் விளைவிக்கிறது. எனவே, போலியான சமூக வலைத்தளங்களை முடக்கவும், அதை இயக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக்கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இன்று, தனது அதிகாரபூர்வமான ஃபேஸ்புக் பக்கத்தின் முகவரியை ட்விட்டரில் வெளியிட்டார் சரத்குமார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT