செய்திகள்

பாகுபலி 2 படத்துக்குத் தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

பாகுபலி 2 படத்துக்குத் தடை விதிக்க மறுத்த உயர் நீதிமன்றம்...

எழில்

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான படம் - பாகுபலி. இதனை இயக்கியவர், ராஜமெளலி. ரூ. 600 கோடி வரை வசூலித்து பல சாதனைகளைச் செய்த பாகுபலியின் 2-ம் பாகமான, 'பாகுபலி தி கன்க்ளூஷன்’ படம் ஏப்ரல் 28 அன்று பாகுபலி 2 வெளிவருகிறது. கீரவாணி இசையில் உருவாகியுள்ள பாகுபலி 2 படத்தின் தமிழ்ப் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.

இந்நிலையில் பாகுபலி படத்துக்குத் தடை விதிக்க உயர் நீதிமன்றத்தில் சென்னையைச் சேர்ந்த ஏசிஇ மீடியா நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. அதன் மனுவில், பாகுபலி 2 படத்தின் தமிழ்நாடு உரிமையைப் பெற்றிருக்கும் ஸ்ரீ கிரீன் புரொடக்சன் நிறுவனத்தின் சரவணன் எங்களிடம் ஒரு கோடியே 18 லட்சம் கடன் பெற்றார். படம் வெளியாகும் முன்பு 10 லட்சம் ரூபாய் சேர்த்துக்கொடுப்பதாக கடந்த ஆண்டு ஒப்பந்தம் போட்டுக்கொண்டார். பாகுபலி 2 படம் 28-ம் தேதி வெளியாகிற சூழலில் தமிழக விநியோக உரிமையை வேறொரு நபருக்கு அதிக விலைக்கு விற்பதாகத் தெரிகிறது. வாங்கிய கடனைத் திரும்பத் தராததாலும் பாகுபலி 2 படத்தின் விநியோக உரிமையை 3-வது நபருக்கு மாற்றியுள்ளதாலும் இதனைக் கருத்தில் கொண்டு படத்தை வெளியிடவும் விநியோக உரிமையை 3-வது நபர்க்கு மாற்றவும் தடை விதிக்கவேண்டும் என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.  

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. பாகுபலி 2 படத்துக்குத் தடை விதிக்க மறுத்த உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணையை வரும் 18-ம் தேதி ஒத்திவைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊா் செழிக்க வேண்டி கிராம மக்கள் வனபோஜன விழா

அறிவுக் கருவூலத்தின் திறவுகோல்!

காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாள்

காஞ்சிபுரத்தில் மாா்ச் 2-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

SCROLL FOR NEXT