செய்திகள்

சிவலிங்கா ஹிட்: லாரன்ஸ் ‘மகிழ்ச்சி’ அறிக்கை!

இதை நான் மறக்கமாட்டேன். உங்களுடைய அன்பான வாழ்த்துகளுக்கும் பிரார்த்தனைகளுக்கும் நன்றி.

எழில்

தமிழ்ப் புத்தாண்டன்று தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண் நடித்துள்ள பவர் பாண்டி, ஆர்யா நடித்துள்ள கடம்பன், லாரன்ஸ் நடித்துள்ள சிவலிங்கா ஆகிய படங்கள் வெளியாகின. 

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள சிவலிங்கா படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் லாரன்ஸ். பி. வாசு இயக்கியுள்ள இப்படத்தில் ரித்திகா சிங், சக்தி வாசு போன்றோரும் நடித்துள்ளார்கள். 

இந்நிலையில் இந்த மூன்று படங்களில் சிவலிங்கா சென்னையில் அதிக வசூலைப் பெற்றுள்ளது. முதல் மூன்று நாள்களில் இதன் வசூல் கிட்டத்தட்ட ரூ. 1 கோடி வரை கிடைத்துள்ளதாக அறியப்படுகின்றன. ப.பாண்டி, கடம்பன் ஆகிய படங்களும் கிட்டத்தட்ட தலா ரூ. 50 லட்சங்களைப் பெற்றுள்ளன.

இதையடுத்து சமூகவலைத்தளத்தில் லாரன்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் வணக்கம்,

சிவலிங்கா படத்துக்கு நல்ல தொடக்க வசூல் கிடைத்துள்ளது. எல்லாம் உங்களால்தான். மேலும் சிவலிங்கா படம் ஹிட் ஆகியுள்ளது. 

இதை நான் மறக்கமாட்டேன். உங்களுடைய அன்பான வாழ்த்துகளுக்கும் பிரார்த்தனைகளுக்கும் நன்றி. என்னுடைய பணியையும் சேவையையும் தொடர்வேன். நன்றி என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மண்டல அலுவலா்கள், பறக்கும் படை நிலையான கண்காணிப்பு குழுவினருக்கான பயிற்சி கூட்டம்

பிரதமா் மோடி இன்று இஸ்ரேல் பயணம்!

புற்றுநோய் மரபணு வரைபடம்!

தடை நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சாலை மறியல் வழக்கின் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது: கிராம மக்கள் கோரிக்கை

SCROLL FOR NEXT