செய்திகள்

அம்மாவும் மனைவியும் இரு கண்கள்: சிவகார்த்திகேயன் உருக்கம்!

சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி நீ மாறாத! உனக்கு ஏத்த மாதிரி சூழ்நிலையை மாத்து!

எழில்

நடிகர் சிவகார்த்திகேயன் ட்விட்டர் தளத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது அவர் அளித்த முக்கியமான பதில்களும் சமீபத்திய தகவல்களும்:

என் அம்மாவும் மனைவியும் உண்மையான அன்பு என்றால் என்ன என்பதைக் கற்றுக்கொடுத்தவர்கள். என்னுடைய இன்றைய நிலைக்குக் காரணமானவர்கள். இரண்டு பேரும் என் கண்கள். 

நான் தொகுப்பாளராக இருந்தபோது என்னால் நடிகனாக முடியும் ஊக்கம் அளித்தவர், நடிகர் விக்ரம். அவருக்கு என் நன்றிகள். 

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பிடித்த பாடல்கள்: காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, பையா. 

அருண்ராஜா காமராஜ் என்னுடைய நெருங்கிய நண்பர். அவர் விரைவில் படம் இயக்கவுள்ளார்.

வேலைக்காரன் படத்தின் முதல் பாடல் ஆகஸ்டில் வெளிவரும். அப்போது பாடல்கள் வெளியீடு குறித்த தகவல்கள் வெளியிடப்படும்.

இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு 25% முடிந்துவிட்டது. 

வேலைக்காரன் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் - அறிவு. பஹத் ஃபாசில் எந்தவொரு ஹாலிவுட் கதாநாயகனுக்கும் ஈடாக நடிக்கக் கூடியவர். 

வேலைக்காரன் படத்தில் பிடித்த வசனம் - சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி நீ மாறாத! உனக்கு ஏத்த மாதிரி சூழ்நிலையை மாத்து!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT