செய்திகள்

மகாராஷ்டிர முதல்வரின் மனைவியை ரஜினி சந்தித்தது ஏன்? (படங்கள்)

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸின் மனைவி அம்ருதா ஃபட்னவீஸை ரஜினி சமீபத்தில் சந்தித்தார்...

எழில்

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸின் மனைவி அம்ருதா ஃபட்னவீஸை ரஜினி சமீபத்தில் சந்தித்தார். இதையடுத்து கலைகளில் மிகவும் ஆர்வம் கொண்ட முதல்வரின் மனைவியை ரஜினி சந்திக்கவேண்டிய காரணம் என்ன என்கிற கேள்வி எழுந்துள்ளது.

ரஜினியை சந்தித்தது குறித்து சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட அம்ருதா, ரஜினியை இன்று சந்தித்தேன். சமூகத்தில் நிலவும் பிரச்னைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து விவாதித்தோம் என்று கூறியுள்ளார். 

இந்நிலையில், அம்ருதா ஒரு தேர்ந்த பாடகி என்பதால் காலா படத்தில் அவர் ஒரு பாடல் பாடவுள்ளார். இதனாலேயே அவரை ரஜினி சந்தித்துள்ளார் என்கிற தகவலொன்றும் வெளியாகியுள்ளது.

ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற பரபரப்பான சூழலில் 2.0 படத்தையடுத்து பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினி. இதன் தலைப்பு - காலா கரிகாலன். நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனத்தின் சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் வெளியாகிறது. இதற்கு முன்பு ரஜினியை வைத்து கபாலி படத்தை இயக்கினார் பா.இரஞ்சித். அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் ரஜினியை இயக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது. கபாலி படத்தைத் தொடர்ந்து சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைக்கிறார். ஹூமா குரேஷி, சமுத்திரக்கனி, நானா படேகர் உள்ளிட்ட சிலர் இப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளனர். இது ரஜினியின் 164-வது படம்.

காலா படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றது. அது நேற்றுடன் முடிவடைந்ததையடுத்து இன்று மும்பையிலிருந்து சென்னை திரும்பினார் ரஜினி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரம் போட்டிகளில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்! சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஓடை கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சென்னை ஜிஎஸ்டி ஆணையா் அலுவலகத்தில் தீ: அலுவலக கோப்புகள், கணினிகள் எரிந்து சேதம்!

கொல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கம் சாா்பில் பேராசிரியா் ய.மணிகண்டனுக்கு விருது!

ஏகாம்பரநாதா் கோயில் கும்பாபிஷேகம்! பக்தா்களுக்கு சந்நிதி தெரு வழியாக மட்டுமே அனுமதி!

SCROLL FOR NEXT