முகப்பு
செய்திகள்

மோசமான நிலையில் ஐஸ்வர்யா ராய் தந்தை மருத்துவமனையில் அனுமதி!

பிரபல நடிகை ஐஸ்வர்யா ராயின் தந்தை கிருஷ்ண ராஜ் ராய், உடல்நலக்குறைவால் கவலைக்கிடமாக உள்ளார்.

Updated On : 11 மார்ச், 2017 at 12:57 PM
பகிர்:

பிரபல நடிகை ஐஸ்வர்யா ராயின் தந்தை கிருஷ்ண ராஜ் ராய், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அறியப்படுகிறது.

கிருஷ்ண ராஜ் புற்று நோயால் அவதிப்படுகிறார். திடீரென அவர் உடல்நிலை மோசமடைந்தததால் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த இரு வாரங்களாக அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் நிலைமை மோசமானதால் அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

ஐஸ்வர்யா ராயும் அபிஷேக் பச்சனும் அருகே இருந்து அவரைக் கவனித்துக்கொள்கிறார்கள். அமிதாப் பச்சனும் அவ்வப்போது மருத்துவமனைக்கு நேரில் வந்து நலம் விசாரித்துவருகிறார். 

Advertisement

இந்தச் சூழலில் வருடா வருடம் அமர்க்களமாகக் கொண்டாடப்படும் அமிதாப் பச்சன் குடும்பத்தினரின் ஹோலி கொண்டாட்டங்கள் இந்த வருடங்கள் ரத்தாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.