ஷாருக் கானுக்கு மகளிர் பாதுகாவலர்கள்!
நடிகர் ஷாருக் கான் தனது பாதுகாப்புக்கு மகளிர் பாதுகாவலர்களை நியமித்துள்ளார்.
நடிகர் ஷாருக் கான் தனது பாதுகாப்புக்கு மகளிர் பாதுகாவலர்களை நியமித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது: தற்போது என் பாதுகாப்புக்காக மகளிர் பாதுகாவலர்களை நியமித்துள்ளேன். ஏனெனில் எனக்கு நிறைய ரசிகைகள் உள்ளார்கள். ரசிகைகளை ஆண் பாதுகாவலர்கள் பிடித்துத் தள்ளும்போது அது மோசமாகிவிடுகிறது.
பெண்களுக்கு நீண்ட நகங்கள் உள்ளன. அதனால் அவர்களுடைய அன்பு காயப்படுத்துகிறது. என் உடலிலும் என் மனைவி, குழந்தைகளுக்கும் நகங்களால் உண்டான காயங்களை விளக்குவது எளிதல்ல.
Advertisement
ரசிகைகள் என்னைப் பிடித்து இழுப்பதில் ஆர்வம் கொண்டவர்கள். ஆகவே நான் மகளிர் பாதுகாவலர்களை என் பாதுகாப்புக்கு நியமித்துள்ளேன் என்று கூறியுள்ளார்.