முகப்பு
செய்திகள்

கார்த்திக் & கெளதம் கார்த்திக் அப்பா மகனாக நடிக்கும் புதிய படம்!

தீராத விளையாட்டுப் பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன் ஆகிய படங்களை இயக்கிய

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

தீராத விளையாட்டுப் பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன் ஆகிய படங்களை இயக்கிய திருவின் அடுத்த படத்தில் நடிக்கவிருக்கிறார்கள் கார்த்திக் மற்றும் கெளதம் கார்த்திக். 

படத்தில் அப்பா மகனாகவே இவர்கள் தோன்றவிருக்கிறார்கள். கிரியேட்டிவ் என்டர்டெயினர் பட நிறுவனம் தயாரிப்பில் படத்தின் ஆரம்ப கட்டப் பணிகள் விரைவில் தொடங்கவிருக்கிறது.

இப்படத்தைப் பற்றி இயக்குனர் திரு கூறியது, ‘இந்தப் படம் அப்பா மகன் சார்ந்தது. ஃபேமிலி டிராமா ஆக்‌ஷன் ஜானர் படம்தான். இரண்டாம் பாதி முழுக்க ஆக்‌ஷன் இருக்கும். படத்தில் அப்பா கார்த்திக் அரசாங்கப் பணியாளராக நடிக்கிறார். மகன் கெளதம் ஒரு பாக்ஸர். படத்தில் அப்பா மகன் என்றாலும் நண்பர்கள் போல பழகக் கூடியவர்கள். அதற்குக் கச்சிதமாக பொருந்தக் கூடியவர்கள் கார்த்திக் சார் மற்றும் கெளதம்’ என்றார் திரு.

கார்த்திக்கு ஜோடியாக் பிரபல ஹீரோயினை பேசி வருகிறார்கள். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் மற்ற கதாபாத்திரத் தேர்வும் நடந்து வருகிறது. கார்த்திக் 'தானா சேர்ந்த கூட்டம்’படத்துக்குப் பிறகு நடிக்கும் படம் இது. இப்பட அறிவிப்பை கெளதம் கார்த்திக் தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →