செய்திகள்

அப்பாவின் பிரபலப் பாடலைப் பாடி ரசிகர்களை நெகிழ்ச்சியடையச் செய்த ஸ்ருதிஹாசன்! (விடியோ)

சினேகா

தற்போது அனைத்து நடிகர் நடிகைகளும் சமூக வலைத்தளங்களில் சுதந்திரமாக உலவி வரும் காலகட்டம் இது. தங்களைப் பற்றிய கிசுகிசுக்களைக் கூட அவர்கள் வெளியிடத் தவறுவதில்லை. அவ்வகையில் ரசிகர்களுடன் இணக்கமாக இருப்பதன் மூலம் தங்கள் நட்சத்திர அந்தஸ்த்தை தக்க வைத்துக் கொள்கின்றனர் நடிகர்கள்.

ரஜினி, கமலை ட்விட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை ஐம்பது லட்சத்துக்கும் குறைவுதான். ஆனால் ஸ்ருதிஹாசனை ட்விட்டரில் பின் தொடர்வோரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட எழுபது லட்சம். ரசிகர்களின் ட்வீட்டுக்கு பதில் அளித்து எப்போதும் ட்விட்டரில் ஆக்டிவாக இருப்பவர் ஸ்ருதி. அண்மையில் நடந்த நிகழ்ச்சியில் ஸ்ருதி தனது அப்பாவின் புகழ் பெற்ற பாடலான ‘தென்பாண்டி சீமையிலே தேரோடும் வீதியிலே மான் போல வந்தவனே யார் அடிச்சாரோ’ என்ற பாடலை ஸ்டைலிஷாக பாடிய நிகழ்ச்சியின் விடியோவை ட்வீட் செய்து பாராட்டியுள்ளார் ஒரு ரசிகர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடனை செலுத்திவிட்டு மனைவியை அழைத்துச் செல்: தனியார் வங்கி அட்டூழியம்

உலகக் கோப்பையில் வேறு மாதிரி விளையாடுவார்: ஹார்திக் பாண்டியாவுக்கு ஆதரவளித்த கவாஸ்கர்!

கனவு, காலம்.. காவ்யா!

போர் நிறுத்தம், பிணைக்கைதிகள் விடுதலை: பிளிங்கன் பயணம் உதவுமா?

சௌதி அரேபியாவை புரட்டிப்போட்ட கனமழை - விடியோ

SCROLL FOR NEXT