ஈஷா சிவராத்திரி பூஜையில் நடனமாடிய தமன்னா! வைரலாகும் விடியோ!
சிவ பக்தையான தமன்னா தனக்கு நேரம் கிடைக்கும் போது திருவண்ணாமலை உள்ளிட்ட பல சிவன் கோவில்களுக்கு தமன்னா சென்று பூஜை செய்வார்.
ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரியை கோலாகலமாக கொண்டாடி வருகிறது ஈஷா. இந்த ஆண்டு சிறப்பு விருந்தினர்களுள் ஒருவராக நடிகை தமன்னாவும் பூஜையில் கலந்து கொண்டார். சிவ பக்தையான தமன்னா தனக்கு நேரம் கிடைக்கும் போது திருவண்ணாமலை உள்ளிட்ட பல சிவன் கோவில்களுக்கு தமன்னா சென்று பூஜை செய்வார்.
அண்மையில் தமன்னா தனது இன்ஸ்டாகிராமில் சத்குரு ஜக்கி வாசுதேவுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இவ்வாறு கூறினார், ‘இது எனக்கு மறக்க முடியாத சிவராத்திரி. ஒவ்வொரு நொடியிலும் ஆனந்தமாக உணர்ந்தேன். சத்குருவுடன் இந்த வருட மகாசிவாராத்திரியை கொண்டாடியதில் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். ஈஷாவில் உள்ள தன்னார்வ தொண்டர்களைப் பற்றி குறிப்பிட்டே ஆகவேண்டும். எவ்வித எதிர்ப்பார்ப்பும் இன்றி ஆத்மார்த்தமாகவும் சந்தோஷமாகவும் அவர்கள் செய்யும் இந்தப் பணி மகத்தானது. அவர்களுக்கும் நன்றி, சத்குருவுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை’ என்று பகிர்ந்துள்ளார் தமன்னா.
புகழ்ப் பெற்ற நடிகை, நகைக் கடை அதிபர் என்பதைத் தாண்டி, தமன்னாவின் இந்த ஆன்மிக ஈடுபாடு அவருக்கு மன அமைதியை தருகிறது என்கிறது தமன்னா வட்டாரம்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.