நம்மோடு வாழும் அப்துல் கலாம் ஐயா: சிவகார்த்திகேயன் நினைவஞ்சலி!
கனவுகளின் வலிமையை இளைஞர்களுக்கு உணர்த்தி, இன்றும் நம் கனவுகளோடும் சிந்தனைகளோடும் செயல்களோடும்...
குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் நினைவு தினமான இன்று அவருக்கு ட்விட்டரில் நினைவஞ்சலி செலுத்தியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.
ட்விட்டரில் அவர் கூறியதாவது:
கனவுகளின் வலிமையை இளைஞர்களுக்கு உணர்த்தி, இன்றும் நம் கனவுகளோடும் சிந்தனைகளோடும் செயல்களோடும் நம்மோடு வாழும் அப்துல் கலாம் ஐயா அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்துவோம் என்று கூறியுள்ளார்.
Advertisement
கடந்த 2015-ம் ஆண்டு, குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம், மேகாலய மாநிலம், ஷில்லாங்கில் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடல் முழு ராணுவ மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க ராமேசுவரத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, 3 மாநில முதல்வர்கள், மாநில ஆளுநர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.