மேற்காசிய போரால் இந்திய ஏற்றுமதியில் தாக்கம்: ஏப். 15-க்கு பிறகே முழுமையாக தெரிய வரும் - மத்திய அரசு
மேற்காசிய போரால் இந்திய ஏற்றுமதியில் தாக்கம் என்னென்ன? ஏப். 15-க்கு பிறகே தெரிய வரும்: மத்திய அரசு
ஹைதராபாத் : மேற்காசிய போரால் இந்திய ஏற்றுமதியில் ஏற்பட்ட பாதிப்புகள் என்னென்ன? என்பதைப் பற்றிய சரியான புள்ளிவிவரங்கள் ஏப். 15-க்கு பிறகே தெரிய வரும் என்று மத்திய அரசு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்ததொரு பேட்டியில், “மத்திய கிழக்கில் நிலவும் மோதலால் இந்திய ஏற்றுமதியில் அதனால் ஏற்பட்டுள்ள முழுமையான தாக்கம் என்னவென்பதை ஏப். 15-ஆம் தேதிக்குப் பிறகே சரியான எண்ணிக்கை தரவுகள் கிடைத்த பிறகே பகுப்பாய்வு செய்ய இயலும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பிப். 28-இல் ஈரானைக் குறிவைத்து அங்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடங்கிய கூட்டுத்தாக்குதல்கள் சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. தாக்குதல்கலுக்கு பதிலடியாக, ஈரான் படைகள் உலகளாவிய சரக்கு கப்பல் போக்குவரத்துக்கான முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்தன. இதனால் உலகளவில் கச்சா எண்ணெய் உள்பட எரிபொருள் விநியோகச் சங்கிலி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement