செய்திகள்

காலா டீசரில் பிரித்து மேய்ந்த யோகி பி: சந்தோஷ் நாராயணன் புதிய தகவல்!

எழில்

நாளை வெளியாகும் காலா பட டீசர் குறித்து புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.

2.0 படத்தையடுத்து பா. இரஞ்சித் இயக்கத்தில் காலா என்கிற படத்தில் நடித்துள்ளார் ரஜினி. நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனத்தின் சார்பில் இப்படத்தைத் தயாரித்துள்ளார். இப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் வெளியாகிறது. இதற்கு முன்பு ரஜினியை வைத்து கபாலி படத்தை இயக்கினார் பா.இரஞ்சித். அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் ரஜினியை இயக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது. ஹூமா குரேஷி, சமுத்திரக்கனி, நானா படேகர், ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

ஏப்ரல் 27 அன்று வெளியாகும் காலா படத்தின் டீசர் இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் காஞ்சி காமகோடி பீடத்தின் 69-ஆவது மடாதிபதியும், ஹிந்து மதத்தின் ஆன்மிகப் பெரியவர்களில் முன்னோடியுமான காஞ்சி ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புதன்கிழமை (பிப்ரவரி 28) காலை 7.45 மணிக்கு சித்தியடைந்தார். அவருக்கு வயது 82.

இதனையொட்டி, காலா டீசர் வெளியீட்டைத் தள்ளிவைப்பதாக தனுஷ் அறிவித்துள்ளார். இன்று வெளியாவதற்குப் பதிலாக காலா டீசர் நாளை வெளியாகும். காலா டீசருக்காக ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும் அவர் ட்வீட் செய்துள்ளார்.

இந்நிலையில் காலா டீசர் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இன்று ட்வீட் செய்துள்ளதாவது:

காலா படத்துக்காக யோகி பி-யுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி. அருமையான, அற்புத திறமைகள் கொண்டவர். காலா டீசரில் அருமையாகப் பங்களித்ததற்காக நன்றி. பிரித்து மேய்ந்து விட்டீர்கள் ஐயா என்று உற்சாகமாக ட்வீட் செய்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொப்பூா் கணவாயில் லாரி கவிழ்ந்து விபத்து

திமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

பென்னாகரத்தில் இடியுடன் கூடிய கனமழை

வாகன புகைப் பரிசோதனை மையங்களில் வழிமுறைகளைப் பின்பற்றாவிடில் கடும் நடவடிக்கை

காவிரி ஆற்றில் மூழ்கிய தனியாா் நிறுவன ஊழியா் பலி

SCROLL FOR NEXT