செய்திகள்

தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் திருமணம் இத்தாலியில் இன்று நடைபெற்றது!

எழில்

பாலிவுட் பிரபலங்கள் தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் ஆகிய இருவரும் இன்று காதல் திருமணம் செய்துகொண்டார்கள்.

2013-ல் சஞ்சய் லீலா பன்சாலியின் ராம்லீலா படத்தில் தீபிகா படுகோனும் ரன்வீர் சிங்கும் இணைந்து நடித்தார்கள். அப்போது முதல் காதலிக்க ஆரம்பித்த இருவரும் இன்று தம்பதி ஆகியுள்ளார்கள்.

இத்தாலியில் உள்ள லேக் கோமோவில் தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் ஆகிய இருவரும் இன்று காதல் திருமணம் செய்துகொண்டார்கள். இன்றும் நாளையும் கொங்கனி மற்றும் சிந்தி என இருவிதமுறைப்படி திருமணம் நடைபெறவுள்ளது. இன்று, கொங்கனி முறைப்படி நடைபெற்ற திருமணத்தில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.

நவம்பர் 10-ம் தேதி இத்தாலி சென்ற காதல் கோடி, நிச்சயதார்த்தம், சங்கீத், மெஹந்தி ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்கள். 

அடுத்ததாக மும்பை மற்றும் பெங்களூரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

SCROLL FOR NEXT