கோவா சர்வதேசப் பட விழாவுக்குத் தேர்வாகியுள்ள நான்கு தமிழ்ப் படங்கள்!
இப்படவிழாவில் பா. இரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள பரியேறும் பெருமாள், ராம் இயக்கியுள்ள பேரன்பு...
நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் சர்வதேச பட விழா நடைபெறுகிறது. கிட்டத்தட்ட 190 படங்கள் இப்படவிழாவில் திரையிடப்படவுள்ளன.
இந்நிலையில் இப்படவிழாவில் பா. இரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள பரியேறும் பெருமாள், ராம் இயக்கியுள்ள பேரன்பு, செழியன் இயக்கியுள்ள டூலெட், சிவா செல்வன் இயக்கியுள்ள பாரம் என நான்கு தமிழ்ப்படங்கள் திரையிடப்படுகின்றன. இந்த நான்கு படங்களில் பரியேறும் பெருமாள் மட்டுமே வெளியாகியுள்ளது.