முகப்பு
செய்திகள்

குடியுரிமைத் திருத்தச் சட்டம்: பிரபல பாலிவுட் நடிகைக்குப் பிரச்னையா?  

'பேட்டி பச்சாவ், பேட்டி பதாவோ' ('Beti Bachao, Beti Padhao') என்ற அமைப்பின் அதிகாரபூர்வமான தூதராக ஹிந்தி நடிகை பரினீதி சோப்ரா இருந்து வந்தார்.

Updated On : 21 டிசம்பர், 2019 at 10:25 AM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 7:07 PM

'பேட்டி பச்சாவ், பேட்டி பதாவோ' ('Beti Bachao, Beti Padhao') என்ற அமைப்பின் அதிகாரபூர்வமான தூதராக ஹிந்தி நடிகை பரினிதி சோப்ரா இருந்து வந்தார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெறும் போராட்டம் குறித்து தனது சுட்டுரையில் கருத்து தெரிவித்ததால், அந்த அமைப்பிலிருந்து அவர் நீக்கப்பட்டார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது. ஆனால் இது தவறான மற்றும் ஆதாரமற்ற செய்தி என ஹரியானா அரசாங்கத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் செய்தித் தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளனர். பரினிதியின் ஒப்பந்தம் ஒரு வருடத்துக்கானது மட்டுமே. அதாவது ஏப்ரல் 2017 வரையில்தான். அதன்பிறகு அவரது ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை.

பரினிதி சோப்ரா சில மாதங்களுக்கு முன்பு லண்டனில் 'தி கேர்ள் ஆன் தி ட்ரெயின்' என்ற படத்தின் படப்பிடிப்பை முடித்தார். இந்தப் படத்தில் அதிதி ராவ் ஹிதாரி, கீர்த்தி குல்ஹாரி மற்றும் அவினாஷ் திவாரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இது தவிர, சாய்னா நேவால் வாழ்க்கை வரலாற்றிலும் நடித்து வருகிறார். இந்தப் படத்திலிருந்து ஷ்ரத்தா கபூர் விலகிய பின்னர் பரினிதி ஒப்பந்தம் செய்யப்பட்டார். பரீனிதி சோப்ரா பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.