செய்திகள்

மணி ரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதை உறுதி செய்தார் விக்ரம்

எழில்

எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையை அடுத்ததாகப் படமாக்கவுள்ளார் இயக்குநர் மணி ரத்னம்.

செக்கச் சிவந்த வானம் படத்துக்கு அடுத்ததாக மணி ரத்னம் இயக்கவுள்ள இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ் போன்றோர் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தை லைகா நிறுவனமும் மெட்ராஸ் டாக்கீஸும் இணைந்து தயாரிக்கவுள்ளன.

வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, ஆதித்ய கரிகாலனாக விக்ரம், சுந்தர சோழராக அமிதாப் பச்சன், வல்லவராயன் பெரிய பழுவேட்டரையராக தெலுங்கு நடிகர் மோகன் பாபு, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவை நாச்சியாராக கீர்த்தி சுரேஷ் போன்றோர் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படம் மற்றும் கதாபாத்திரங்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மணி ரத்னம் இயக்கவுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதை ஐஸ்வர்யா ராய் சமீபத்தில் உறுதி செய்தார். ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது: மணி ரத்னம் இன்னமும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் செய்தி வெளியே வந்துவிட்டது. ஆமாம். மணி ரத்னம் இயக்கும் படத்தில் மீண்டும் நடிக்கிறேன். நான் அதற்கு ஒப்புக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. என்னுடைய குருவுடன் இணைந்து மீண்டும் பணியாற்ற நான் எப்போதும் மிகுந்த ஆவலுடன் இருப்பேன். ஆமாம்.. இது நடந்துகொண்டிருக்கிறது, மீண்டும் என் பள்ளிக்குத் திரும்புகிறேன் என்றார். ஐஸ்வர்யா ராய் அறிமுகமான இருவர் படத்தை மணி ரத்னம் இயக்கினார். அதன்பிறகு குரு, ராவணன் ஆகிய மணி ரத்னத்தின் படங்களில் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தில் நடிப்பதை விக்ரமும் உறுதி செய்துள்ளார். மணி ரத்னம் இயக்கும் அடுத்தப் படத்தில் நான் நடிக்கிறேன். அடுத்த வருட ஆரம்பத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்று சினிமா எக்ஸ்பிரஸ் இணைய இதழுக்கு அவர் பேட்டியளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் படத்தின் டிரெய்லர்

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

SCROLL FOR NEXT