நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் வடிவேலு
வடிவேலு மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வடிவேலு மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் பேய் மாமா என்கிற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் வடிவேலு. 2015-ல் வெளியான எலி படத்தில் கதாநாயகனாக நடித்தார் வடிவேலு. அதன்பிறகு கத்திசண்டை, ஷிவலிங்கா, மெர்சல் ஆகிய படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தார். இந்நிலையில் நான்கு வருடங்கள் கழித்து, இப்படத்தின் மூலம் மீண்டும் கதாநாயகனாகியிருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.