பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிக் கவனம் பெற்ற இயக்குநர் மாரி செல்வராஜின் அடுத்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் தனுஷ்.
இந்தப் படத்துக்கு கர்ணன் எனப் பெயரிடப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இதன் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கவுள்ளது.
தாணு தயாரிக்கும் இந்தப் படமும் தனது முதல் படம் போல முக்கியமான பிரச்னையைப் பேசும் என மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.